என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "நர்சிங் மாணவி பாலியல் பலாத்காரம்"
பேரையூர்:
திருமங்கலம் அருகேயுள்ள மேலக்கோட்டை கீரியகவுண்டன் பட்டியைச் சேர்ந்த 17 வயது பெண். திருமங்கலத்தில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் படித்து வருகிறார்.
அவரும் ஆலம்பட்டியைச் சேர்ந்த சரவணபாண்டி (21) என்பவரும் கடந்த 1 1/2 ஆண்டாக காதலித்து வந்தனர். சரவணபாண்டி சி.ஏ. முடித்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த 12-ந் தேதி அந்த பெண் கல்லூரிக்கு செல்வதாக வீட்டிலிருந்து கிளம்பிச் சென்றார். அதன் பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் காணவில்லை.
எனவே பெண்ணின் தந்தை திருமங்கலம் தாலுகா போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து இளம்பெண்ணையும், அவரை கடத்தியதாக கூறப்பட்ட சரவண பாண்டியையும் மருத்துவ பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு நடைபெற்ற பரிசோதனையில் இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருப்பது உறுதியானது.
இதைத்தொடர்ந்து மைனர் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக சரவணபாண்டியை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
மருத்துவ பரிசோதனைக்கு பின்னர் அந்த பெண் காப்பகத்தில் சேர்க்கப்பட்டார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்